இளவரசருக்காக வெயிட்டிங்க… ஷெரினின் திருமணம் குறித்த அப்டேட்…!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஷெரினும் ஒருவர், இவரை ஷெரின் என்பதைவிட ஏஞ்சல் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்.

அனைவரிடமும் அன்பு பாராட்டி வந்தவர் இவர், 4 வது வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உண்மையிலேயே அனைத்து போட்டியாளர்களிடமும் சகஜமாக பழகக் கூடியவர் ஷெரின் ஆவார், சேரனுக்கு அடுத்தபடியாக சிறந்த பெயரினைப் பெற்றவரும் இவரே ஆவார்.

4f3d835ca5739253023504b371f809aa

வீ ஆர் த பாய்ஸ் டீமுடன் சரி, வனிதா, சேரன் போன்றோருடனும் சரி சிறப்பான உறவினைக் கொண்டு இருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்த இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சிதான். 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே தெரிந்த இவர் 2கே கிட்ஸ்களுக்கும் பரிச்சையமாகினார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் மொபைல் வழியாக இணையதள சேனலுக்கு பேட்டி அளித்த ஷெரினிடம் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, “திருமணம் செய்துகொள்ளும் நபர் நமக்கான நபராக இருக்க வேண்டும், ஆனால், இப்போது என் வாழ்வில் அப்படி யாரும் இல்லை என்பதால், அதுபோன்ற ஒருவரின் வருகைக்காக காத்திருக்கிறேன்.

லாக்டவுனில் வீட்டிற்குள்ளேயே என் இளவரசருக்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.