நடிகர் சங்க தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லையா? நடிகர்கள் புலம்பல்


8c96cab797e072e09483adbb7005b3eb

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வழங்கப்பட்ட போது அதில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும் மீண்டும் மூன்று மாதத்திற்குள் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்த தீர்ப்பால் பாக்யராஜ் அணியினர் மகிழ்ச்சியும் விஷால் அணியினர் அதிர்ச்சியும் அடைந்தனர்

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இதனால் நடிகர் சங்க உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு என்று சென்றால் குறைந்தபட்சம் வழக்கு முடிய மூன்று வருடங்கள் ஆகிவிடும் என்றும் அதுவரை தனி அதிகாரியின் கையில் நடிகர் சங்கம் இருப்பதற்கு விஷாலே வழிவகை செய்யக் கூடாது என்றும் விஷாலுக்கு ஒரு சில மூத்த நடிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்

ஆனால் விஷால் மேல்முறையீடு செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட ராதாரவி இதுகுறித்து கூறிய போது ’மேல்முறையீடு செய்யாமல் விஷால் தேர்தலை சந்திக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறியுள்ளார்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...