வேலவனுக்கு இத்தனை வகை வேல்களா?!

குழந்தையாய் சுவாமி மலையில், கோவம் கொண்டாடி பழனியிலும், சூரனை அழிக்க திருச்செந்தூரிலும், கல்யாணக்கோலத்தில் திருப்பரங்குன்றத்திலும், திருத்தணியிலும்.. இப்படி பல்வேறு ரூபத்தில் முருகன் எழுந்தருளியிருப்பார். ஆனால், அவரது கையிலிருக்கும் வேலும் இப்படி பல்வேறு ரூபத்தில் பக்தர்களின் துயரை துடைக்கின்றது..

b1ea63d85a23eb2afe5bebe566b01238

வேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள் பற்றி பார்க்கலாம்..

முருகப்பெருமானின் கரத்தில் விளங்கும் வேலாயுதம் வடிவாலும், வனப்பாலும் அது செய்யப்பட்ட பொருளாலும் புராணச் சிறப்பாலும் அது நிகழ்த்திய வீரச் செயலாலும் பல்வேறு பெயர்களைப் பெறுகின்றது. இவ்வகையில் அதன் அமைப்பை ஒட்டி சக்திவேல், வஜ்ரவேல், இலைவேல், நெடுவேல் என்ற பெயர்களைப் பெற்றுள்ளது. சக்திவேல் சக்தியின் வடிவாகவும், வஜ்ரவேல் வைரம் பதித்ததாகவும் இருக்கின்றன.

சில வேல்களின் இலைப் பகுதியில் மந்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. இப்படி அமைக்கப்படும் மந்திரச் சக்கரங்கள், மந்திர வடிவங்களையொட்டி அது மந்திரவேல் எனப்படுகிறது. உயர்ந்த ரத்தினங்கள் இழைக்கப்பட்டு செய்யப்பட்ட வேல் நவரத்தினவேல் என்றும், மாணிக்கம் பதித்த வேல் மாணிக்கவேல் என்றும், வைரக் கற்களைக் கொண்டு இழைத்த வேல் வைரவேல் என்றும், தங்கத்தால் செய்யப்பட்ட வேல் தங்கவேல் என்றும், முத்துக்கள் பதிக்கப்பட்ட வேல் முத்துவேல் என்றும் அழைக்கப்படுகின்றன.

மேலும், அன்பர்கள்பால் அருள்புரியம் உயர்ந்த குணங்களைக் கொண்டிருப்பதால் குணரத்தின வேல் என்றும், மணிரத்தின வேல் என்றும், தங்கமாக எண்ணத்தில் திளைப்பதால் தங்கவேல் என்றும், எதிரிகளைச் சங்கரித்து அழிப்பதால் சத்ரு சங்கார வேல் என்றும் அழைக்கப்படுகிறது. அவரவர் தகுதிக்கும், வளமைக்கும், செல்வச் செழுமைக்கும் ஏற்ப, வேல்களைப் பொன்னாலும், நவமணிகள் இழைத்தும் செய்து வழிபடுகின்றனர். என்றாலும், வீரர்கள் ஏந்தும் வேல்கள் யாவும் உறுதியான எஃகினால் செய்யப்படுவதாகும். அது கூர்மைமிக்கதாகவும் உறுதிமிக்கதாகவும் வீசி எறிவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது.

0bfe5c330c868aa2cff92e7fb5edf476

சக்தி வேல்

வேலின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சக்தி வேலாயுதம் ஆகும். சக்தி என்னும் ஆயுதத்தின் வடிவம் என்பது மூன்று முக்கோணங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்தது போன்றதாகும். முருகன் நாற்கரங்களோடு திகழ்கையில், சக்தியாயுதத்தைத் தனது இடது மேற்கரத்தில் ஏந்துகிறார். சக்திவேல் என்பது சக்தி ஆயுதத்தை நீண்ட தண்டின் முனையில் பொருத்தி அமைக்கப்பட்டதாகும். வேலாயுதத்தைப் போலவே சக்தி வேலாயுதமும் தனிச் சிறப்புடன் போற்றப்படு கிறது. அன்பர்கள் சக்திவேல் என்ற பெயரைச் சூட்டிக் கொள்கின்றனர். சக்தி ஆயுதம் அக்னிக்குரிய அடையாளமாகும். அதையொட்டிேய அக்னியில் உதித்தவரான முருகன் சக்திவேலை ஏந்துகின்றார்.

தணிகை முருகன் சக்தி ஆயுதத்தை ஏந்தியிருப்பதால், ஞானசக்திரர், சக்திரர் என்றே அழைக்கப்படுகின்றார். சிக்கல் சிங்காரேவலர், சுவாமிமலை சுவாமிநாதன், வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி போன்ற முருகன் வடிவங்களுக்கு, உயர்ந்த கல்லிழைத்த சக்தி வேலாயுதம் சாத்தப்படுகிறது. முருகன் மேற்கரங்களில் வஜ்ரம், சக்தி ஆகிய இரண்டையும் தாங்கியுள்ளார் என்றாலும் அவற்றுடன் சக்திவேலையும் தாங்குகின்றார். வேலாயுதத்தை முருகப்பெருமானாகவே கொண்டாடுவதால் அதைப் படைக்கலமாக அமைக்காமல் அதனையொத்த சக்தி ஆயுதத்தைப் படைக்கல வழிபாட்டிற்கு வைத்துள்ளனர் என்பது பலரது கருத்தாகும்.

முருகன் ஆலயங்களில் சக்தி ஆயுதமே அஸ்திரதேவர் என்னும் படைக்கல தெய்வமாகப் போற்றப்படுகிறது. பெருந்திருவிழாவின்போது முருகனின் வீதியுலாவிற்கு முன்பாக சக்தி ஆயுதமே எடுத்துச் செல்லப்படுகிறது. தீர்த்தவாரி விழாக்களிலும் சக்தி ஆயுதத்தையே நீராட்டி வழிபடுகின்றனர்.

d4236abc3e539c05308f83daa886b3cb

சக்ர வேல்

இந்திய வழிபாட்டில் மந்திர பீஜங்களை வட்டம், சதுரம், முக்கோணம் ஆகியவை இணைந்த கட்டங்களில் எழுதி வழிபடும் சக்ர வழிபாடு ஓர் அங்கமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு தேவதைக்கும் அதன் அருளாற்றலை வெளிப் படுத்தும் வகையில் அமைந்த சக்கரங்கள் பல உள்ளன. இவ்வகையில் வேலாயுதத்தைப் போற்றும் வகையில் அமைந்த பல சக்கரங்கள் வழிபாட்டில் இருக்கின்றன. இவற்றில் சில சக்கரங்களை வேலின் இலை போன்ற பகுதியில் கீறி அமைத்துள்ளனர். சிலவற்றைச் சதுரமான தகட்டில் எழுதி உருட்டி வேலின் தண்டுப் பகுதியில் உள்ள இடைவெளியில் செலுத்தி மூடி விடுவதும் உண்டு.

பொதுவான நிலையில் வேலின் மையத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனுள் அறுகோணத்தை இட்டு அதன் மையத்தில் ஓம் எனும் பிரணவத்தையும், சுற்றியுள்ள ஆறு முக்கோணங்களில் ச, ர, வ, ண, ப, வ என்னும் ஆறு எழுத்துகளையும் எழுதி வழிபடுகின்றனர். மேலும், சடாட்சர சக்கரம், சத்ரு சம்ஹார சக்கரம், சக்தி நிலைய சக்கரம் போன்ற சிறப்பு நிலையில் அமைந்த சக்கரங்களையும் வேல் வழிபாட்டில் காண்கிறோம்.

இதில் குறிப்பிடத்தக்கது அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் ஆலயத்திலுள்ள ஆறுமுகவேலவரின் கையிலுள்ள வேலாயுதமாகும். இங்குள்ள ஆறுமுகநாத சுவாமி திருக்கரத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட வேலாயுதம் உள்ளது. இதில் பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் அருளாணைப்படி பழனிசாமி முதலியார் என்பவர் இந்தச் சக்கர வேலாயுதத்தை அமைத்தார் என்று கூறப்படுகிறது. அவர் அமைத்துள்ள இந்தச் சக்கரம் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. இதனை, ‘‘சத்ருசங்கார வேல் சக்கரம்’’ என்றும் கூறுகின்றனர்.

மேலும், அருணகிரிநாதசுவாமிகள் அருளிய வேல் வகுப்பை வேல்மாறல் எனும் யந்திரமாக அமைத்தும் வழிபடுகின்றனர். வேல் வகுப்பான பதினாறு அடிகளைத் திரும்பத் திரும்ப மாற்றி மண்டலித்து வரும்படி அறுபத்துநான்கு அடிகளாக விரித்துப் பாராயணம் செய்யும் முறையை, திருப்புகழ் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் உண்டாக்கினார்கள். இந்த அமைப்பு வேல்மாறல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வழிபாட்டில் சதுரத்தின் நடுவே அமைந்த வட்டத்தின் நடுவில் ஆறு வேல்களின் வடிவில் எழுதப்பட்ட இதழ்களின் வேல் வகுப்பை எழுதிச் சக்கரமாக அமைத்து வழிபடுகின்றனர். இதில் மூன்று வேல்கள் இலை வேல்களாகவும், மூன்று வேல்களைச் சக்தி வேல்களாகவும் மாறி மாறி அமைத்துள்ளனர். இது வள்ளிமலை சுவாமிகளின் பக்தர்களால் மிகவும் சிறப்புடன் இப்போதும் போற்றப்படுகிறது. இது வேல் மாறல் யந்திரம் ஆகும். இன்னும் அனேக சக்கரங்கள் வேல் வழிபாட்டுடன் இணைந்திருப்பதைப் பல நூல்களில் காணலாம்.

உத்தண்ட வேல்

நீண்ட ஒரு தடியை தண்டம் என்பர். தீயவரைத் தண்டித்து உயர்ந்தவரைக் காப்பதால், வேலுக்கும் தண்டம் என்பது பெயராயிற்று. வேலைச் சிறப்பித்துக் காட்டும் வகையில் உத்தண்ட வேலன் என்றும் அழைக்கப்படுகிறார். பழனி முருகனுக்குத் தண்டாயுதபாணி என்ற பெயர் வழங்குகிறது. சக்திவேல், வஜ்ரவேல் போன்று உத்தண்ட வேல் என்பது வேலின் வடிவங்களில் ஒன்றாகும். நீண்ட தண்டாயுதமே உத்தண்ட வேல் எனப்படுகிறது.

6da7bc58bf9c80d2fcb0f384ba8ffee2

முத்துவேல்

முத்துகள் பதித்த வேல், முத்துவேல். முத்து என்பது உயர்ந்தவற்றை, தரமானவற்றை, அழகானவற்றைக் குறித்தும் சொல்லாகும். முத்துவேல் என்பது மனதைக் கவரும் அழகு படைத்ததும், உயர்ந்ததும், ஆற்றல் மிக்கதுமான வேல் என்ற பொருளைத் தருகிறது. மக்கள் முத்துவேல் என்ற பெயரைச் சூடிக் கொள்கின்றனர்.

மந்திரவேல்

முருகன் ஏந்தும் வேல்களில் மந்திரவேலும் ஒன்றாகும். கல்லாடம் எனும் நூல் வேலாயுதத்தை, ‘உள்ளத்திருளும் இடைபுகுந்து இருள் துடைத்த மந்திரத் திருவேல்’ என்று போற்றுகிறது. மந்திரம் என்பதற்கு நீங்காது உடனிருந்து காப்பது என்பது பொருளாகும். தன்னை வணங்கும் அன்பர்களை விட்டு நீங்காது காத்து அருள்புரிவதால் வேலுக்கு மந்திரவேல் என்பது பெயராயிற்று. ‘வேலும் மயிலும் துணை’ என்பது மகாமந்திரம்.

கந்தர்சஷ்டி கவசத்தில் ‘மந்திர வடிவேல் வருக வருக’ என்று பாலதேவராயர் வேலை அழைப்பதைக் காண்கிறோம். சைவ சமயம் கூறும் மகா மந்திரம் ஐந்ெழுத்தாகிய நமசிவாய என்பதாகும். இதனைச் ‘சிவமஞ்செழுத்து’ எனவும் குறிப்பர். அருணகிரிநாதர் வேலாயுதத்தையே ‘சிவமஞ்செழுத்து’ என்கிறார். சிதம்பரத்தில் அருளிச் செய்துள்ள திருப்புகழில் ‘வெங்களத்தில் அவுணன் தெரிந்து மயங்க சிவமஞ்செழுத்ைத முந்தவிடுவோனே’ என்று அவர் பாடுவதைக் காண்கிறோம்.

மணிமந்திர நூலான கந்தர் அனுபூதியின் ஐம்பத்தோரு பாடல்களில் இருபத்தைந்து பாடல் களில் அருணகிரிநாதர் வேைலப் புகழ்கின்றார். அஷ்டசக்தி வேலாயுதங்கள் அந்தகாசுரனை வதைக்கச் சிவபெருமானால் உண்டாக்கப்பட்ட யுக்த சக்திகள் அஷ்டமாதர்கள் ஆவர் – பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டி, யோகேஸ்வரி. அவனை வதைத்தபின் அவர்கள் சிவனைத் தொழுது மேன்மை பெற்றனர்.

இம்மாதர்கள் போர்க்களத்தில் வேலேந்திப் போரிடுகின்றனர். பிராம்மி பிரம்மவேலையும், மகேஸ்வரி மகாசக்தி வேலையும், கௌமாரி பத்ர வேலையும், வைஷ்ணவி பத்ம வேலையும், வாராகி வஜ்ர வேலையும், இந்திராணி இந்திரநீல வேலையும், சாமுண்டி சம்ஹார வேலையும், யோகேஸ்வரி உக்ர வேலையும் ஏந்திப் போரிடுகின்றனர். இந்த எட்டு வேல்களையும் அஷ்டவேலாயுதங்கள் என்றழைக்கின்றனர்.

ரத்தினவேல்

ரத்தினவேல் என்பதற்கு இரத்தினம் போன்ற உயர்ந்த குணங்களைக் கொண்ட வேல் என்றும், நவரத்தினங்கள் பதித்த வேல் என்னும் பொருள் கூறுகின்றனர். புகழ் பெற்ற ஆலயங்களில் நவரத்தினக் கற்கள் இழைத்த விலைமதிப்பு மிக்க வேலாயுதம் முருகனுக்கு அணிவிக்கப்படுகிறது. நவரத்தினங்களால் ஆன வேலாயுதங்களை முருகனின் தம்பியரான நவவீரர்கள் ஏந்துகின்றனர். இவர்கள் அன்னை பராசக்தியின் பிரதி பிம்பத்திலிருந்து தோன்றிய நவரத்தின மங்கையராகிய 1) மாணிக்கவல்லி 2) முத்துவல்லி 3) புஷ்பராகவல்லி 4) கோமேதகவல்லி 5) வைடூர்யவல்லி 6) வைரவல்லி 7) மரகத வல்லி, 8 ) பவள வல்லி 9) நீலவல்லி ஆகிய ஒன்பதின்மரின் குமாரர்களாவர்.

முருகன் தன் தாயிடமிருந்து வேலாயுதத்தைப் பெற்றதைப் போலவே இவர்களும் தத்தம் தாயிடமிருந்து வேலாயுதங்களைப் பெற்றனர். அவையே நவரத்தினவேல்களாகும் – மாணிக்க வேல், முத்தவேல், புஷ்பராக ேவல், கோமேதக ேவல், வைடூர்ய ேவல், வைர வேல், மரகத வேல், பவள ேவல், நீல வேல். இந்த ஒன்பதின்மரும் தமக்குரிய வேலுடன் முருகனோடு விளையாடி மகிழ்வதை பழைய கால ஓவியங்களில் கண்டுகளிக்கலாம். மக்கள் முத்துேவல், மரகதேவல், மாணிக்கவேல், மற்றும் பொதுவாக ரத்தினவேல் என்று பெயர்களைச் சூடுகின்றனர்.

5c365adf772f411c4805024ce18c3200-1

வஜ்ர வேல்

வஜ்ரம் என்பது இந்திரனின் ஆயுதம். இது இரண்டு சூலங்கள் தம்முன் இணைந்தது போல் இருப்பது. இதனைக் குலிசம் என்றும் அழைப்பர். மூன்று முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது போன்ற வடிவம் கொண்டதே சக்தி ஆயுதமாகும். இது பெண் சக்தியாகும். புராணங்களின்படி இந்திரன் சக்தி ஆயுதம் கொண்டவனில்லை. அவன் வஜ்ஜிரம் எனப்படும் குலிசாயுதன், அவனைக் குலிசாயுதன் என்றும், வைரப்படையான் என்றும் இலக்கியங்கள் போற்றுகின்றன.

வஜ்ரம் என்பதற்கு அறுக்க முடியாதது, துளைக்க முடியாத, உடைக்க முடியாத அதாவது, எதனாலும் சேதப்படுத்த முடியாதது. எளிதில் வெல்ல முடியாததும், அழிக்க முடியாததுமான உறுதிமிக்க ஆயுதமாக மேல் இருப்பதால் அது வஜ்ரவேல் எனப்பட்டது. மக்கள் வஜ்ரவேல் என்ற பெயரைச் சூடியுள்னர்.

வஜ்ரவேல் என்பது உறுதி, திண்மை, திறமையின் காரணமாக வேலுக்கு அமைந்த பெயர், வடிவத்தால் வந்ததல்ல. புராணங்கள் முருகன் ஏந்தும் வேலாயுதத்தை அதன் மேன்மை காரணமாக வஜ்ரவேல் என்று அழைக்கின்றன. மக்கள் உயர்ந்த ஜாதிக் கல்லான வைரங்கள் பதித்த தங்கவேலையே வஜ்ரவேல் என்றழைக்கின்றனர். அனேக ஆலயங்களில் வைரக்கற்கள் பதித்த வேல்கள் இருக்கின்றன. நடைமுறையில் சக்தி ஆயுதத்தைத் தலைப்பில் கொண்ட சக்திவேலைப் போல வஜ்ராயுதத்தை முகப்பில் கொண்ட வஜ்ராயுத வேல்கள் இல்லை.

தங்கவேல்

தங்கவேல் என்பதற்கு இருவிதமான பொருளைக் கூறுகின்றனர். முதற்பொருள், அது உயர்ந்த உலோகமாகிய தங்கத்தால் செய்தது; இரண்டாவது, அன்பர்களின் வாழ்வில் செல்வ நலன்கள், வளம், மேன்மை போன்றவற்றை எந்நாளும் தங்கி இருக்கும்படி அருள்புரிவது. ஆலயங்களில் தங்கத்தால் ஆன வேலாயுதத்தைச் செய்து முருகனுக்குச் சாத்தியுள்னர். அதில் மேலும் அழகூட்ட உயர்ந்த ஜாதி வண்ணக் கற்களைப் பொருத்தியுள்ளனர். வேல் வழிபாடு மனதில் மகிழ்ச்சியைத் தங்க வைக்கும் வழிபாடாக இருக்கிறது.

வெள்ளி வேல்

வெள்ளி தூய்மையான உலோகம். அதனால் அதைக் கொண்டு பூஜைப் பொருட்களைச் செய்கின்றனர். பெரும்பாலான ஆலயங்களில் வெள்ளியால் செய்த வேலாயுதமும் சேவற்கொடியும் முருகனுக்குச் சாத்தப்படுகின்றன. அன்பர்கள் வெள்ளி வேலை காணிக்கையாகச் செலுத்தி மகிழ்கின்றனர். அனேக அன்பர்கள் இல்லங்களில் வெள்ளியால் செய்யப்பட்ட வேலாயுதம் வழிபாட்டில் இருந்து வருகிறது.

எஃகு வேல்

தங்கம், வெள்ளி உலோகங்கள் மதிப்புமிக்கவையாக இருந்தபோதிலும், அவை ஆயுதங்களாகச் செய்து பயன்படுத்தத் தகுதியற்றவை. அவை கவர்ச்சியும், மதிப்பும் மிக்க அணிகலன்களைச் செய்ய மட்டுமே பயனாகும். இரும்பு எளிய உலோகமாக இருந்தாலும், வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளைச் செய்வதற்கு ஏற்ற உலோகமாக இருக்கிறது. இரும்பு அதனோடு சேர்ந்துள்ள கரியின் தன்மைக்கேற்ப பலவகைப்படும். அதில் தேனிரும்பு, காரிரும்பு, எஃகு என பல வகைகள் உள்ளன.

எஃகு இரும்பு உறுதியும், எளிதில் வளையாததும், கூர் மழுங்காததும், துருப்பிடிக்காததுமான தன்மைகளைக் கொண்டதாகும். அதனால் போர்த்தளவாடங்களை எஃகினால் மட்டுமே செய்தனர். குறிப்பாக, விரைந்து சென்று இலக்கைத் தாக்கும் வேலாயுதங்களை எஃகால் செய்தனர். அதனால் வேலுக்கே எஃகம் என்பது பெயராயிற்று. ஆதியில் திருப்படைக் கோயில் எனப்படும் வேல் கோயில்களில் அமைத்து வழிபடப்பட்ட வேல்கள் யாவும் எஃகினால் செய்யப்பட்டவையே. வசதியும் வாய்ப்பும் பெருகும்…’

இத்தனை விதமான வேல்களும் முருகனுக்கு அடிப்பணிந்து பக்தர்களின் துயர் துடைக்க பறந்தோடி வருகின்றது. அதனால்தான் வேலுண்டு வினையில்லை என சொல்கிறார்கள்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.