வாழ்வை வளமாக்கும் சின்ன சின்ன பரிகாரங்கள்

எப்பேற்பட்ட பெரிய பிரச்சனைக்கும்  சிறிய தீர்வே பலன் தரும்.‪ அந்த தீர்வை நாம் எடுக்க கடவுள் அருளும், பித்ருக்கள், நவக்கிரங்கங்கள் தேவதைகள் ஆகியோரும் ஆசியும் தேவை.. அவற்றை பெற எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்.. பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து நலம் பெறலாம்…

4185973f6ba5b4d3e20a94e231c6560a-1

வழக்குகள், பஞ்சாயத்துகளில் வெற்றி கிட்ட ‎சிவன்‬ கோவிலில் இருக்கும்  வன்னி மரம் மற்றும் வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாய் வரும். இம்மரங்கள் தெய்வசக்தி கொண்டதால் நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளது என நம்பப்படுகிறது. ‪

‎பிரதோச காலத்தில் ‬நந்தி வாகனத்தில் இருக்கும் அம்மையப்பனை வழிபட்டால் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறலாம். அதிலும் ஈசானிய மூலையில் அம்மையப்பனுக்கு  காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

‪திருமண தடைப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள் சிவனுக்கு உகந்த உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும். ‎

4706c06affdf6e54ee14376924e0186c-1

‎சங்கடஹர சதுர்த்தியில்‬ விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட சங்கடங்கள் தீரும்.  விநாயகருக்கு எருக்கஞ்செடி நாரில் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள். இரட்டைப்‬ பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

நல்லதொரு வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள் செவ்வாய்க்கு‬ அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் கிழமைகளில் நெய்விளக்கேற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.  விபத்துகளில் சிக்காமலிருக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகன் கோவில்களில் இருக்கும் வேலில் எலுமிச்சைப்பழம் சொருகி முருகனுக்கு அர்ச்சனை செய்து, நீண்ட பயணத்தை தொடங்கலாம்..

‎ருத்ராட்சம்‬, சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது என்பது ஐதீகம். அதனால் வீட்டில் துளசி வளர்ப்பது நல்லது. சாளக்கிராமத்தினை வீட்டில் வைத்து வழிபடலாம்.

பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவை ஐந்தும் கலந்த ‎பஞ்சகவ்ய‬ கலவையை வாரம் ஒருமுறை வீடுகளில் தெளிக்க தோசம், தீட்டு நீங்கி, லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

எளிய பரிகாரங்கள் தொடரும்….

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews