த்ரிஷா எடுத்த திடீர் முடிவு: தெலுங்கு திரையுலகினர் அதிர்ச்சி

தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ’ஆச்சார்யா’ சிரஞ்சீவி 154வது திரைப்படமான இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஆச்சாரியா படத்தில் இருந்து திடீரென நடிகை த்ரிஷா விலகி விட்டதாக கூறப்பட்டது. இந்த தகவலை தற்போது த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்
தனது கேரக்டர் குறித்து கூறிய போது ஒரு விதமாக இருந்ததாகவும், தற்போது வேறு மாதிரியாக இருப்பதாகவும் அதனால்தான் இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும் விரைவில் தெலுங்கு ரசிகர்களை மீண்டும் ஒரு நல்ல படத்தின் சந்திப்பேன் என்றும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

சிரஞ்சீவியின் ஆச்சாரியா படத்தில் இருந்து த்ரிஷா விலகியதை அடுத்து வேறொரு முன்னணி நடிகை என்ற படத்தில் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...