தீபாவளி பண்டிகையின்போது படைக்கப்படும் கார வகைகள்!!!

இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக இருப்பது தீபாவளி மட்டுமே. தீபாவளிக்கு புத்தாடைகள் எடுக்காமல் யாரும் இருக்கமாட்டார்கள்.

தீபாவளி என்றால் ஒரு வாரம் முன்பே பலகாரங்கள் வீட்டில் செய்யத் துவங்கி விடுவர், தீபாவளி அன்று முன்னோர்களுக்கும் கடவுளுக்கும் படையலிட்டு படைப்பர்.

அந்தப் படையலில் முன்னோர்களுக்கு பிடித்த பலகாரங்கள் இடம்பெறும்படியாக செய்து இருப்பர், படைத்து முடித்த பின்னர் அந்த பலகாரங்களை அருகில் உள்ள வீட்டினருக்கு கொடுத்து மகிழ்வர்.

d8ab8056b7ab0aa9401f1c7dfa7cba7d
File source: https://commons.wikimedia.org/wiki/File:Diwali_offerings_to_god_in_Tamil_Nadu_JEG2437.jpg

பலகாரங்களில் கார வகையில் நிச்சயம் முருக்கு இடம்பெறும், அடுத்து சிலர் மிக்சரும் கூட செய்வர், ஆனால் அது சற்று கடினமான செயல்முறை என்பதால் மாற்றாக மைதா பக்கோடா போன்றவற்றினையும் செய்வர்.

கடைகளைப் பொறுத்தவரை கார வகைகளில் முருக்கு, ஓட்டுப் பக்கோடா, மிக்சர், கார பூந்தி போன்றவை தீபாவளி ஸ்பெஷல் வகைகளாக போடப்பட்டிருக்கும்.

முன்னோர்களுக்குப் படைப்பதால், வெளியில் இருந்து வாங்கிப் படைப்பதனைக் காட்டிலும் வீட்டிலேயே செய்வதே சிறப்பான ஒன்றாக அனைவரும் கருதுவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...