நடிகை சமந்தா 2007 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு பாலிவுட் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது, கொரோனாவால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் வீட்டில் இருந்துவரும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிறந்தநாள் புகைப்படங்கள், அவர் நடிப்பு கற்கும் வீடியோ, தன் செல்ல நாயுடனான புகைப்படம் எனப் பதிவிட்டு வருகின்றார்.
அந்தவகையில் தற்போது ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அதாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தநாட்களில் மாஸ்க் கூட அணியாமல் நாக சைதன்யாவுடன் வெளியே பைக்கில் கிளம்பும் போட்டோவினைப் பதிவிட்டு, வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.