ரஜினியின் பேட்டிக்காக பலமணி நேரம் காத்திருந்த செய்தியாளர்களுக்கு கிடைத்த வாழ்த்து!


8dc433384c660142f63ca5df9fb3679b

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ’தலைவர் 168’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார் என்ற செய்தி வெளியானதும் சென்னை விமான நிலையத்தில் தமிழகத்தில் உள்ள முன்னணி பத்திரிகையாளர்கள் அனைவரும் குவிந்திருந்தனர்

அவரது வருகைக்காக காத்திருந்த செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்க தயார் நிலையில் இருந்தனர். தர்பார் திரைப்படம், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சட்டமன்றத்தில் நடைபெற்றுவரும் நடவடிக்கை ஆகியவை குறித்து கேள்விகள் அவரிடம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் ’அனைவருக்கும் எனது அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று மட்டும் கூறி விட்டு உடனடியாக அவர் கிளம்பி விட்டார். இதனால் பேட்டியை எதிர்பார்த்த செய்தியாளர்களுக்கு பொங்கல் வாழ்த்து மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.