பொன்னம்பலத்து அரசன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

00436bd63f6b4cd72df908658eb5f536

பாடல்..

நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத் தரசே
ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்
தொண்டனேன் இசையுமா றிசைய

விளக்கம்..

திருநீற்றை அணிந்த செந்நிறமான பவளமலை போல்பவனே! நிலைபெற்ற நெற்றிக்கண்ணை உடைய, நெருப்பின் நிறத்தினனே! பல்வேறுவகைப்பட்டனவாய் வரிசையாக அமைந்த இவ்வுலக இன்பங்களே வடிவானவனே! முத்தி இன்பம் தரும் வெள்ளம் போல்பவனே! மேருமலையை வில்லாக வளைத்த வீரனே! கங்கையை அணிந்த சடையை உடைய, எங்களுடைய வியக்கத்தக்க கூத்து நிகழ்த்துபவனே! அழகிய பொன்னம் பலத்து அரசே! காளையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உயர்த்திய, எம்மை அடக்கி ஆள்பவனே! உன்னை, அடியவனாகிய நான் கூடுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews