தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய பிரபல நடிகர்


f71c8e08be4c57959b5aa11c931763f6-1

ஆந்திராவை சேர்ந்த 99 மீனவர்கள் தமிழகத்தில் உள்ள சென்னை துறைமுகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பசி பட்டினியாக இருப்பதாகவும் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்

இந்த வேண்டுகோளை ஏற்ற தமிழக முதல்வர் உடனடியாக 99 பேருக்கு உணவு உடை மற்றும் இருப்பிடம் கொடுக்க ஏற்பாடு செய்தார்

இதுகுறித்து பவன் பவன் கல்யாண் தனது தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ எடபாடி கே பழனிசாமி அவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்‌கிறேன்‌. எனத முறையீட்டு விண்ணப்பத்தின்படி ஸ்ரீகாகுளம்‌ மாவட்டம்‌ சோமபேட்டா மண்டலத்தின்‌ கோலகண்டு கிராமத்திலிருந்து மீன்பிடிக்க தமிழக கடற்கரை எல்லைக்கு சென்ற சுமார்‌ தொண்ணூற்று ஒன்பது மீனவர்கள்‌, கோரோனா வைரஸ்‌ பாதுகாப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில்‌ சிக்கி தவித்தவர்களுக்கு உடனம மீட்பு நிவாரணப்‌ பணிகளை மேற்கொண்டுள்ளார்‌.

முதல்வர்‌ தனது அதிகாரிகளுக்கு அளித்த உத்தரவின்‌ பேரில்‌ அவர்களுக்கு தங்கும்‌ வசதி மற்றும்‌ உணவு பொருள்கள்‌ அளித்து உள்ளனர்‌ என்பது தெரியவந்தது, எனக்கு மிகவும்‌ மகழ்ச்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சியின்‌ அதிகாரிகளின்‌ இந்த உடனடி மீட்பு பணியில்‌ களயிறங்கியதை அறியும்‌ போது எனக்கு மிகவும்‌ நெகிழ்ச்சியாகவும்‌ பெருமையாகவும்‌ உள்ளது. மற்றும்‌ எனது ஜனசேனா தொண்டர்கள்‌ தகுந்த நேரத்தில்‌ இந்த மீனவர்களை காப்பாற்றக்‌ கோரியதும்‌ அதற்குறிய நடவடிக்கை எடுக்ககோரி வேண்டியதும்‌, அவர்கள்‌ குடும்பத்தாருக்கு ஆறுதல்‌ அளிக்கும்‌ விதமாக அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டதும்‌ மிகவும்‌ பாராட்டத்தக்கது. இவ்வாறு பவன்கல்யாண் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...