மாஸ்க் இல்லை என கூறிய ஆந்திர டாக்டருக்கு நேர்ந்த துயரம்

விசாகபட்டினம் அடுத்த நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர் டாக்டர் சுதாகர். கடந்த மாதம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்கான மாஸ்க் உள்ளிட்ட போதிய பொருட்கள் தேவையான அளவு இல்லை என வெளிப்படையாக குற்றம் சாட்டியதால் இவர் அம்மாநில சுகாதாரத்துறையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

685491e70ea9e47cd0bc0d340f6e744d

இந்த நிலையில்  நரசிபட்டினம் அருகே உள்ள சாலையில் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில், டாக்டர் சுதாகர்அரை நிர்வாண கோலத்தில் லாரி ஒன்றின் முன் கிடந்துள்ளார்.

அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்துகின்றனர். முன்னதாக போலீசார்தான் அவரின் கைகளை பின்புறமாக கட்டி அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் ஆந்திராவில் எழுந்துள்ளது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...