நம்மை கண்காணிக்கும் யார் அந்த ஒன்பது பேர்?!


ae9d7fcb5f738380db69d890e7431dc4

யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு நாம செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் ஒன்பது பேர் பார்த்துக்கிட்டு இருக்கிறார்கள்ன்னு நமது இந்து மதம் சொல்கிறது. நமது நல்லது கெட்டதுக்கு அந்த ஒன்பது பேர்களே சாட்சியாகும்.சரி, யார் அந்த ஒன்பது பேர்ன்னு தெரிஞ்சுக்கலாமா?!

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்);
இது தவிர சூரியன், சந்திரன்,யமன், காலம்(நேரம்) என்ற அந்த ஒன்பது பேர்தான் நம்மை கண்காணிச்சுக்கிட்டே இருக்காங்க. பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலேயே எல்லாம் அடங்கிவிடும்தான் ஆனாலும்,  சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதையும் இதில் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்– எனவும் பொருள் கொள்ளலாம்

அடுத்து யமன்.. யமனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் இதற்கு அர்த்தம் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு சித்திரத்தை/ படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த=ரகசியமாக) இருக்கிறது. இதனாலேதான் ‘சித்திர’‘குப்த’ என்றனர். உதாரணத்துக்கு ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால்கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். அது நமக்கு கண்ணுக்குத் தெரியாது. அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுமாதிரியே நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ண்மும் ஒரு அதிர்வலையை உண்டாக்கும் அது நமக்குத் தெரியாது சித்திரகுப்தன் அல்லது யமனுக்குத் தெரியும். சித்திரகுப்தன் அல்லது யமன் என்பவன் நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்களை கூட்டிக் கழித்து பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.

நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை.

பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர். நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்னி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும். காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.

இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!

ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம்
நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்;

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews