தமிழ் திரையுலகில் இரண்டு பிரபலங்கள் இணைந்து பணிபுரிவது என்பது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களிடையே இமேஜ் இல்லாததே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படத்தில் மகிழ்திருமேனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் ஆர்யா, தினேஷ் உள்பட பலர் நடிக்கவுள்ள நிலையில் தற்போது மகிழ்திருமேனியும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
வடசென்னை பாக்ஸர் ஒருவரின் உண்மை கதையான இந்த படத்தில் ஆர்யா பாக்ஸராகவும், மகிழ்திருமேனி பாக்சர் பயிற்சியாளராகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது