இந்தியன் 2’ விபத்து குறித்து விசாரணை: கமலிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன?


cd7e37562ff666cd592ce89bd4fc9509

சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் 2’படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் பலியாகினர் என்பதும் 7 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் மார்ச் 3ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கமலஹாசனுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது

இந்து சம்மன் அடிப்படையில் சற்றுமுன்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் கமலஹாசன் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் இந்த விசாரணை குறித்த தகவல்கள் இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே கடந்த வாரம் இயக்குனர் ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews