சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘தர்பார்’ படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என சசிகலா தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது
இந்த கோரிக்கையை அடுத்து ’பணம் இருந்தால் சிறையில் உள்ளவர்கள் கூட ஷாப்பிங் செல்லலாம்’ என்ற வசனம் தர்பார் படத்தில் இருந்து நேற்று முதல் நீக்கப்பட்டது
இதனையடுத்து இதுகுறித்த கேள்வி ஒன்றை செய்தியாளர்கள் எழுப்பியபோது அதற்கு பதில் கூறிய நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது: : ’பராசக்தி காலத்தில் இருந்தே கருத்துரிமை பிரச்சினை உள்ளது, தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங்தான்
கமலஹாசன் கூறிய இந்த நச் பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது