கமலுக்கு நன்றி தெரிவித்து கேரள காவல்துறை கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் கொஞ்சம் கேரளா சாதாரணமாக இருப்பதுபோல் தெரிந்தது. மஹாராஷ்டிராவுக்கு அடுத்து கேரளாவில்தான் அதிகமான கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்கள் இருந்தனர்.

3ef5ab88d510a5c0242ed72bf9c93562-1

பின்பு கேரள சுகாதாரத்துறையினர், காவல்துறை கொஞ்சம் சீரிய முறையில் அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி இப்போது கொரோனா முற்றிலும் குறைந்த மாநிலமாக ஆகி விட்டது.

நாளை மறுதினம் முதல் கேரளாவில் நிறைய மாற்றங்கள் வர இருக்கின்றன. இரவு 7மணி வரை ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிடக்கூட கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

கேரளாவின் அனைத்து துறை சார்ந்த நடவடிக்கைகளை கமல்ஹாசன் சமீபத்தில் பாராட்டி இருந்தார்.

e82b1d1022db1de9a36501f01a880e88

இதற்கு நன்றி தெரிவித்து கேரள காவல்துறை அலுவலகத்தில் இருந்து கேரள மாநில டிஜிபி லோக்நாத் பெஹ்ரா நன்றி கடிதம் ஒன்றை கமலுக்கு அனுப்பி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews