கைக்குழந்தைக்குக்கூட கொடுக்கலாம் இந்த இனிப்பை….

பொதுவா இனிப்பினை குழந்தைகளுக்கு கொடுக்க தயங்குவோம். ஆனா, இந்த பொட்டுக்கடலையினால் செய்த லட்டினை எந்த பயமும் இன்றி கொடுக்கலாம். வீட்டிலேயே செய்தது, புட் கலர் எதும் கலக்கலை. எண்ணெயில் செய்யலை. அதனால், மிகுந்த பாதுகாப்பானது.

88738e7a1bb5c5d1195f64c46fd1f704

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை – 200 கிராம்
வெல்லம் – 100 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
நெய் – 3 மேஜைக்கரண்டி
வெந்நீர் – ஒரு கப்
செய்முறை :

பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை துருவி கொள்ளவும்.
இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.
பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.
விருப்பப்பட்டால் பாதாம், பிஸ்தா கொண்டு அலங்கரிக்கலாம். முந்திரி திராட்சையினை வறுத்து சேர்த்துக்கொள்ளலாம்.

சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி. கைக்குழந்தைக்கும் கொடுக்கலாம் இந்த லட்டை..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews