சந்திரமுகி 2 குறித்து அப்டேட் கொடுத்த ஜோதிகா!!

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என பல முன்னணி நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து மிகவும் பிரபலமான படம் சந்திரமுகி திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தினை பி.வாசு இயக்கினார்.

2005 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 200 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடி சாதனை புரிந்தது. வசூல் வேட்டை நடத்திய இப்படத்தில் நடிகை ஜோதிகா தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.

26c0376df14e00b6264ca8e1159021f7

மொழி, குஷி என்ற படங்களின் வரிசையில் ஜோதிகாவின் நடிப்பிற்காக பெரிதும் பேசப்பட்ட படங்களில் சந்திரமுகியும் ஒன்று. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன போதிலும் இப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது அதற்கு கிடைக்கும் டிஆர்பி வேறு லெவலாக உள்ளது.

இந்தநிலையில் இயக்குனர் பி.வாசு இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கும் முடிவினை எடுத்துள்ளார்.  இரண்டாம் பாகத்தில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

இப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் குறித்து கேட்க, ஜோதிகா கூறியதாவது, “சந்திரமுகி ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்ற திரைப்படம், அதன் இரண்டாம் பாகம் வரவேற்கத்தக்க விஷயமாகும். இப்படம் குறித்து யாரும் என்னை அணுகவில்லை. அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews