இன்று உலக முட்டாள்களின் தினம்

9e45cb058ab4fd7887f56f0750fe7622

மகளிர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம், ஆடவர் தினம், அம்மாக்கள் தினம், சிரிப்பு தினம், வனதினம் என ஒவ்வொன்றுக்கும் தினம் ஒதுக்கி கொண்டாடப்படுது. அடுத்தவங்களை விளையாட்டாய் ஏமாற்றுவதற்காகவே ஒருநாளை ‘முட்டாள்கள் தினம்’ என கொண்டாடப்படுகிறது. குழந்தைகளால் பெரிதும் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் இந்நாள்.முன்பு  ஏப்ரல் 1 அன்று, காலை முதல் மாலை வரை இத்தினத்தை கொண்டாடினர். பின்னர் மதியம் வரை கொண்டாடினர்.

இந்த தினத்தை கொண்டு வந்ததில் ’பாஸ்வெல்” என்பவருக்கு முக்கிய பங்குண்டு. சில பழங்குடி மக்கள் இத்தினத்தை வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாய் சூரியனை வழிப்பட்டு கொண்டாடப்பட்டனர். பண்டைய காலத்தில் ரோமானியர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தினை ஏப்ரல் 1 தேதிதான் கொண்டாடி வந்தனர். ஐரோப்பிய  நாடுகளும் ஏப்ரல் 1 தேதியில்தான் புத்தாண்டை கொண்டாடினர். 1562ஆம் ஆண்டு கிரகோரி என்ற போப்’ஜார்ஜியன்’ என்ற காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஏப்ரல் 1 க்கு பதில் ஜனவரி 1 தான் புத்தாண்டு தினமாய் குறிக்கப்பட்டு, இனி புத்தாண்டை ஜனவரி 1 தான் கொண்டாடப்படவேண்டுமென உத்தரவிட்டார். 

இங்கிலாந்தில் இந்த மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு ஏப்ரல் 1யே புத்தாண்டு தினமாய் கொண்டாடினர். மேலும் போப்பின் உத்தரவு போய்ச் சேராத நாடுகள் ஏப்ரல் 1ஐ புத்தாண்டாய் கொண்டாடினர்.  பழைய காலண்டர் முறை மாறி புது காலண்டர் முறை வந்தது தெரியாமல் புத்தாண்டு கொண்டாடுபவர்களை முட்டாள்களென  கிண்டல் செய்தனர்.  காலப்போக்கில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமானது. நம்மூர்ல சட்டையில் இங்க் அடிப்பது, காலுக்கு கீழ் பாம்பு இருக்கு, இன்னிக்கு ஸ்கூல் லீவ்ன்னு முட்டாள்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். பொண்டாட்டிக்கு போன் போட்டு மாட்டி விடுறதுன்ன்னு விதவிதமா முட்டால்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...