சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த குடியரசு தின விழா தேனீர் விருந்தில் நடிகை கௌதமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் கௌதமிக்கு எப்படி அழைப்பு கிடைத்தது என்று தமிழக பாஜகவினர் ஆச்சரியத்தில் உள்ளனர்
இது குறித்து கருத்து கூறிய ஒரு பாஜக பிரமுகர் தமிழ் பேசும் மத்திய பெண் அமைச்சர் ஒருவர் கௌதமிக்கு நெருக்கமானவர் என்றும் அவருடைய பரிந்துரையின் பேரில்தான் அவருக்கு அழைப்பு கிடைத்திருக்கும் என்று கூறியுள்ளார்
இந்தநிலையில் கௌதமி குடியரசு தலைவர் மாளிகையில் தேனீர் விருந்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. விரைவில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்ட இருப்பதாகவும் அப்போது கௌதமிக்கு ஒரு முக்கிய பதவி கிடைக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன