தீப ஆராதனையின்போது கண்ணை மூடிக்கொள்வது சரியா?!

181bd7d753d40c05635c4522c0d1fc99-1

பல மணிநேரம் காத்திருந்து அடிச்சு பிடிச்சு கோவிலுக்குள் சென்று, இறைவனுக்கு தீப ஆராதனை காட்டும்போது சாமி கும்பிடுறேன்னு கண்ணை மூடிக்கொண்டு நிற்பர். இது தவறான செயலாகும். இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. கோயிலில் உள்ள மூலவரைக் கண்டவுடன் ஒரு நொடிகூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து இறைவனை மனதிற்குள் உள்வாங்கிக்கொள்ளனும். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள். இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள். ஏனென்றால், நீங்கள் மூலவர்முன் செல்லும்போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம். முன் நிற்பவரோ அல்லது அர்ச்சகரோ இறவனை மறைத்துக்கொண்டிருக்கலாம்.

எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய். நான் உன்னை தரிசிக்க முடியாமல் போனாலும் நீ என்னை பார்த்துக்கொண்டு தான் இருப்பாய். உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும்என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே, இறைவனை காண வேண்டும். இறைவனிடம் வேண்டுவதற்கென ஒன்றுமில்லை. நமது தேவைகள் என்னவென்று படைத்தவனுக்கு தெரியாதா?!

எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள். அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு. எது தேவையில்லையோ அதை நீக்கிவிடுஎன்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள். பின்னர் தினசரி பூஜையின் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில்நினைத்து பிரார்த்தனை செய்வது தான். உண்மையான வழிபாடு ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews