சிதம்பரம் கோவில் தீட்சிதர் பிரச்சினை- கஸ்தூரி கடும் விமர்சனம்

சிதம்பரம் கோவிலுக்குள் நேற்று முன் தினம் அங்குள்ள முக்குறுணி விநாயகருக்கு அர்ச்சனை செய்ய சொன்ன பெண்ணிடம் தவறாக பேசியது அடித்தது உள்ளிட்ட வகைகளில் அங்கிருந்த தீட்சிதர் விமர்சனத்துக்க்குள்ளானார் போலீசார் அவரை தேடி வருகின்றனர் அவரை போலீஸ் தேடி வரும் நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து தனது டுவிட்டரில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

1fd4f35f001ec00c83ab7f243d38221e

கடவுளை, பணியிடத்தை, ஒரு பெண்ணை, பக்தையை, தமிழை , அனைத்தையும் அவமதித்து , சிரத்தையுடன் பணிபுரியும் மற்ற அர்ச்சகர்களும் அவமானத்தை தேடி தந்துள்ள அறிவிலிக்கு கோவிலுக்குள் பணி செய்யும் தகுதி இல்லை.

சிதம்பரம் கோவிலில் , கடவுளின் சன்னிதானத்தில் ஒரு தீக்ஷிதர் மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ள காணொளி கண்டு அதிர்ச்சியடைந்தேன். புரோகிதம் செய்பவரே பொறுக்கித்தனமாக நடந்துகொண்டால் பிறகு யாரை சொல்லி என்ன பயன்?

என்று அவர் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...