வீட்டுக்குப் போக முடியல. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரித்விராஜ்…

ஊரடங்கினால் உலகின் பல நாடுகளிலும் விமானப் போக்குவரத்து சேவையானது முடக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வெளிநாடு சென்றவர்கள் இந்தியா திரும்பமுடியாமல் திணறி வந்தனர்.

அந்தவகையில் நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படத்தில் நடிப்பதற்காக ஜோர்டான் நாடு சென்றிருந்தார். விமான சேவைகள் நிறுத்தப்பட அவர் வீடு திரும்ப முடியாமல் இருந்துவந்தார்.

மேலும் பாலைவனத்தில் உணவு கிடைப்பதும் சிரமமாக உள்ளது என அவர் வலைதளங்களில் பதிவிட அவரது தாயார் படக் குழுவினரை மீட்டு வரச் செய்யுங்கள் என்று கேரள அரசிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

f4be7550283b1595b3fd7db35cf2e421

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின்படி, ஆடு ஜீவிதம் படக்குழுவினர் 57 பேர் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். டெல்லியில் இருந்து கொச்சின் வந்தடைந்த அவர்கள் தற்போது கொச்சினில் உள்ள ஒரு ஹோட்டலில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து மீதமுள்ள 56 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு வாரங்கள் கழித்தே தங்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது. இவ்வளவு தூரம் வந்தபோதிலும் தனது மகள் மற்றும் மனைவியைக் காண பிரித்விராஜ் இன்னும் 2 வாரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறுபுறம் பிரித்விராஜின் மனைவி அரசாங்கம் மற்றும் ரசிகர்களுக்கு ந்ன்றி தெரிவிக்கும்விதமாகப் பதிவினைப் பதிவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.