அட்சய திருதியை அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?!


அட்சயம்” என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும். இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை(26-04-2020) அன்று வருகிறது. இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. அதனால்தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். எல்லாராலும் தங்கம் வாங்க இயலாது. தங்கமே வாங்க வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. அதனால், விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.

அட்சய திருதியை நாளன்று என்ன செய்தால் என்ன பலன் கிடைக்குமென தெரிந்து அதன்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6ec0a6ece08995e4ffc98e6cf0e479ae

அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும். அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும்.  பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் முக்கூடல் எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று அங்கு சென்று நீராடினால் நல்ல பலன் கிடைக்கும். அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர்.  இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும்.

கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தான தர்ம உதவிகள், பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும். புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும். தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிடைக்கும். தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும். பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும். தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

மோர், பானகம், குடிநீர் ஆகியவற்றை தானம் செய்தால் முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். தன் சக்திக்கு ஏற்ப தானம் செய்தால் நரகத்தின் கொடுமைக்கு ஆளாகாமல் கைலாயம் செல்லலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும். தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும், ஏழ்மையையும் மிக குறுகிய காலத்தில் தீர்க்கும். தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும். அவரவர் வசதிப்படி அட்சய திருதியை கொண்டாடுவோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews