நாடெங்கிலும் குடியுரிமை சட்ட திருத்த சட்டத்துக்கு எதிராக கடும் பிரச்சினைகள் வெடித்து வருகிறது. டெல்லி ஜாமியா பல்கழைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் பயங்கர கலவரம் வெடித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் நாளை அனைத்து கட்சிகளின் சார்பில் நாளை பேரணி நடைபெறுகிறது. அனைவரும் இதில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.
பல நடிகர்கள் இதில் பங்கேற்பார்கள் என கூறப்படும் நிலையில் நாளை நடைபெறும் பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் அவர் இங்கு இல்லை ஷிமோகாவில் படப்பிடிப்பில் இருக்கிறார் என அவர் தந்தை எஸ்.ஏ சி கூறியுள்ளார்.