ஆடி செவ்வாய் வழிபாட்டுக்கு உகந்த காய்கறி கதம்ப சாதம்…


b487e6db11fa231db91e111ef0b52b06

ஆடி செவ்வாயில் குழந்தைகளை கடவுளாய் நினைத்து, அவர்களுக்கு பூஜை செய்து, படையலிட்டு, உணவு பரிமாறி சாப்பிட வைத்து அவர்களுக்கு, பாவாடை சட்டை, வாட்ச்,வளையல், பொட்டு, கண்ணாடி, புத்தகம், சைக்கிள் என பரிசளிப்பது வழக்கமாய் இருந்தது.. இப்படி ஆடி செவ்வாய் வழிபாட்டின்போது செய்யப்படும் அன்னதானத்திற்கு மற்ற நாட்களில் செய்யப்படும் அன்னதானத்தை விட 48 மடங்கு அதிகம் பலன் கிடைக்குமாம். இப்படி அன்னதானம் செய்யப்படும் சாப்பாட்டில் காய்கறிகள் அதிகமிருக்க வேண்டும் என்பது நியதி.

b764e7c740f9121e99a92498b6a80423

காய்கறிகள் நிறைந்த காய்கறி சாதம் செய்முறையை இனி பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்…

பொன்னி புழுங்கல் அரிசி – 1 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1 கப்
தண்ணீர் – 5 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 1 துண்டு

புளி – எலுமிச்சையளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
பீன்ஸ் -10

கேரட்…1
முருங்கைக்காய் – 1
அவரைக்காய் – 10
கொத்தவரங்காய் – 10
கத்தரிக்காய் – 2
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு, 
உளுத்தம் பருப்பு, 
கறிவேப்பிலை

வறுத்து அரைக்க :

தேங்காய் துருவல் – கால் கப்
வத்தல் மிளகாய் – 4
கடலைபருப்பு – 2 ஸ்பூன்
தனியா – 4 ஸ்பூன்

செய்முறை :

அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பை நன்றாக கழுவி ஊற வைக்கவும். காய்கறிகளை நீளவாக்கில் அறிந்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டை கரகரப்பாக அரைக்கவும். வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் போட்டு நன்றாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். குக்கரில் கழுவிய அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு 5 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் பொடி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக வறுத்து அரைத்த பொடியை போட்டு 2 நிமிடம் கிளறி, குக்கரில் வேக வைத்துள்ள சாதத்தில் ஊற்றி நன்றாகக் கிளறவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் .ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சாதத்தில் ஊற்றி கிளறி இறக்கவும்.

* சூப்பரான காய்கறி கதம்ப சாதம் ரெடி

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews